May 26, 2026
Thisaigal NewsYouTube
வங்கிகள் கவனக்குறைவாக இருந்தால் பொது மக்கள் இழப்பீடு கோரலாம்
தற்போதைய செய்திகள்

வங்கிகள் கவனக்குறைவாக இருந்தால் பொது மக்கள் இழப்பீடு கோரலாம்

Share:

கோலாலம்பூர், டிச.3-


வங்கிகள் கவனக் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டால் மோசடியால் பாதிக்கப்பட்ட வங்கி கணக்கு உரிமையாளர்கள் இழப்பீடு கோர முடியும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 413வது பிரிவின் கீழ் வங்கிகள்
இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.
இந்த சட்டப் பிரிவின் கீழ் 178,407 வெள்ளி திரும்பப் பெறப்பட்டு இருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.

ஒரு தவறு வங்கினால் நிகழுமானால் அதன் மூலம் வாடிக்கையாளர்கள் இழப்பீடு கோருவதற்கான வழிகள் உள்ளன என்பதே இதன் பொருளாகும் என்று நிதி அமைச்சருமான் டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.
எனினும், இங்கிலாந்து சட்டத் திட்டத்துடன் தொடர்பு படுத்தப்பட்டதைப் போல் வங்கித் தரப்பின் கவனக் குறைவு அல்லது அவர்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாதது கண்டறியப்படால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும். இந்த கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை தாம் ஒப்புக்கொள்வதாக பிரதமர் குறிப்பிட்டார்.

இன்று மக்களவையில் பாடாங் தெராப் உறுப்பினர் நுருள் அமின் ஹமிட் எழுப்பிய துணைக் கேள்விக்கு பதிலளிக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரை நிகழ்ந்த இணைய
மோசடிக் குற்றங்களில் 122.2 கோடி வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாக
டத்தோஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு