ஜார்ஜ்டவுன், ஜூலை.11-
பினாங்கு மாநில ஆட்சியாளர் துன் ரம்லி ஙா தாலிப்பின் 85-வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற விருதளிப்பு விழா, இன்று ஜூலை 11-ஆம் தேதி, 17 குண்டுகள் முழங்க கோலாகலமாகத் தொடங்கியது.
துன் ரம்லி ஙா தாலிப், தனது மனைவி தோ புவான் டத்தோ ராஜா நூரா அஷிகின் ராஜா அப்துல்லாவுடன் காலை 8.45 மணியளவில் டேவான் ஶ்ரீ பினாங் அரங்கிற்கு வருகை புரிந்தார்.
தேசிய கீதம் மற்றும் பினாங்கு மாநில கீதம் இசைக்கப்பட்டதைத் தொடர்ந்து நிகழ்ச்சி தொடங்கியது.
பின்னர், Malay Regiment 2-வது படைப்பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் 103 வீரர்கள் அடங்கிய அணிவகுப்பு வழங்கிய மரியாதையை அவர் பார்வையிட்டார்.
இந்த அணிவகுப்புக்கு Lieutenant Muhammad Azrul Hisham Nazri தலைமை தாங்கியதுடன், வாரண்ட் அதிகாரி Yusri A.B. Wahab அணிவகுப்பை sergeant major-ஆக வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 17 குண்டுகள் முழங்கும் மரியாதையும் செலுத்தப்பட்டது.








