Aug 10, 2026
Thisaigal NewsYouTube
இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட விசாரணையில் அனைத்து தகவல்களும் துல்லியமாக ஆராயப்படும் – எஸ்பிஆர்எம் உறுதி
தற்போதைய செய்திகள்

இஸ்மாயில் சப்ரி சம்பந்தப்பட்ட விசாரணையில் அனைத்து தகவல்களும் துல்லியமாக ஆராயப்படும் – எஸ்பிஆர்எம் உறுதி

Share:

புத்ராஜெயா, மார்ச்.18-

லஞ்ச ஊழல் மற்றம் சட்டவிரோதப் பண மாற்றம் தொடர்பில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் சம்பந்தப்பட்ட விசாரணையுடன் தொடர்புடைய எந்தவொரு தகவலையும் மிகத் துல்லியமாக விசாரணை செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் உறுதி பூண்டுள்ளது.

ஒரு வீட்டில் 177 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்கக்கட்டிகள் கண்டு பிடிக்கப்பட்டது விவகாரத்துடன் இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான விசாரணையை எஸ்பிஆர்எம் நிறுத்தி விடாது. மாறாக, அந்த முன்னாள் பிரதமர் தொடர்புடைய எந்தவொரு தகவல் கிடைத்தாலும் அதனை ஆராய்வதற்கு எஸ்பிஆர்எம் தயாராக இருப்பதாக அந்த ஆணையத்தின் தலைமை ஆணையர் டான்ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இஸ்மாயில் சப்ரியுடன் இதுவரையில் நடைபெற்று வரும் விசாரணை, சுமூகமாக சென்று கொண்டிருக்கிறது. அதேவேளையில் புதிய சிக்கல்கள் எழுந்தால், அது தற்போதைய விசாரணையையொட்டிய தகவல்கள் கிடைக்கப் பெறுமானால், பூர்வாங்க விசாரணையும், புதிய தகவல்களும் ஆராயப்படும் என்று அஸாம் பாக்கி உறுதி கூறினார்.

இஸ்மாயில் சப்ரிக்கு எதிரான எஸ்பிஆர்எம் விசாரணை ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. ஆனால், பல விஷயங்களில் முழுமையான பதிலை எதிர்பார்க்க வேண்டியிருப்பதால் அவருக்கு எதிரான விசாரணை தொடரும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து