Mar 18, 2026
Thisaigal NewsYouTube
சர்ச்சைக்குரிய விவகாரத்திற்குத் தீர்வு: ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் அமைச்சர் ங்கா
தற்போதைய செய்திகள்

சர்ச்சைக்குரிய விவகாரத்திற்குத் தீர்வு: ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்தார் அமைச்சர் ங்கா

Share:

புத்ராஜெயா, நவம்பர்.03-

ஊடகவியலாளர்களிடம் மனம் திறந்த மன்னிப்புக் கோரிய வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங், நல்லெண்ண அடிப்படையில் ஊடகங்களிள் பிரதிநிதிகளை இன்று சந்தித்தார்.

இன்று காலையில் புத்ராஜெயாவில் உள்ள ங்காவின் அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் மலேசிய பத்திரிகையாளர் சங்கமான NUJM, மலேசிய ஊடகவியலாளர் மன்றம் உட்பட பத்திரிகையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அமைச்சர் என்ற முறையில் தாம் இடம் பெற்றுள்ள மடானி அரசாங்கம், ஊடகச் சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிப்பதாகவும், பத்திரிகையாளர்களை ஓரங்கட்டும் எண்ணம் தமக்கு இல்லை என்றும் ங்கா விளக்கினார்.

தமது அமைச்சுக்கும், ஊடகங்களுக்கும் இடையில் நெருக்கமான உறவை வளர்த்துக் கொள்ளவே இந்தச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கோலாலம்பூரில் புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற I Lite U எனும் ஒளியூட்டும் திட்டம் தொடர்பாக தாம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளுக்காக அமைச்சர் ங்கா, நேற்று ஊடகவியலாளர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பைக் கேட்டுக் கொண்டார்.

தாம் வெளியிட்ட கருத்து குறித்து பல தரப்பினர் குறை கூறியுள்ளனர். ஆக்ககரமான கருத்துகள் அனைத்தையும் தாம் திறந்த மனப்பான்மையுடன் ஏற்றுக் கொள்வதாக ங்கா குறிப்பிட்டு இருந்தார்.

தகவல் ஊடக நண்பர்கள் எவரின் மனத்தையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ங்கா தெரிவித்து இருந்தார்.

Related News

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது