ஈப்போ, நவம்பர்- 10
இன்று, ஈப்போ - Pasir Putehஇல் உள்ள Taman Puteri Lindungan Bintangஇல் ஒரு வீட்டில் இருந்து வந்த துர்நாற்றத்தைத் தொடர்ந்து, ஒரு பெண்ணின் சடலத்தை கண்டெடுக்கப்பட்டது.
ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர், Asisten Komisioner Abang Zainal Abidin Abang Ahmad இச்சம்பவம் குறித்து தெரிவிக்கயில், பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த பெண் உள்ளூர்வாசி எனவும் ஓர் அறையில் முடங்கிய நிலையில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
துர்நாற்றம் அடைந்த சடலம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. ந்தமாது கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. முதற்கட்ட விசாரணை நடந்து வரும் நிலையில், அந்த பெண்ணின் உறவினரான 21 வயதுடைய ஆடவர் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டு கொலை குற்றச்சாட்டின் கீழ் விசாரிக்கப்படுகிறது.








