சபா, கோத்தாகினபாலு கடற்பகுதியில் பிடிக்கப்படும் கிளிஞ்சல்களை உண்பதை மக்கள் தவிர்க்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் பிடிக்கப்படும் கிளிஞ்சல்கள் ஒருவகையான நச்சுத்தன்மையை கொண்டு இருப்பதால் அவற்றை உண்ண வேண்டாம் என்று சபா மீன்வள இலாகா கேட்டுக்கொண்டுள்ளது.
இவ்வகை கிளிஞ்சல்களை உண்பதால் தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற உபாதைகள் ஏற்படலாம் என்று அவ்விலாாகா எச்சரித்துள்ளது.








