ஷா ஆலாம்,ஜன.3
இரண்டு முன்னாள் பிரதமர்கள் சம்பந்தப்பட்ட முந்தைய நிர்வாகத்தில் அவர்களை பற்றியும், அவர்கள் தலைமையிலான அரசாங்கத்தைப் பற்றியும் விளம்பரப்படுத்துவதற்கு 70 கோடி வெள்ளி செலவிடப்பட்டுள்ளதாக கூறப்படுவது தொடர்பில் அரசாங்கத்தின் சில முன்னாள் தலைவர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுவர் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தெரிவித்துள்ளது.
இதுவரையில் எந்தவொரு முன்னாள் தலைவரும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லை என்றாலும் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளது என்று எஸ்பிஆர்எம் மின் புலன் விசாரணை பிரிவின் இயக்குநர் டத்தோ ஶ்ரீ ஹிஷாமுடின் ஹஷிம் குறிப்பிட்டுள்ளார்.








