கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் சம்பவத்தில் பாதுகாப்பு அம்சம் ஒரு விவகாரமாக எழவில்லை . எனவே இதனை பெரிதுப்படுத்த வேண்டியதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அமைச்சர் என்ற முறையில் தியோங் கிங் சிங் விஐபிக்கான சிறப்பு அனுமதி அட்டையைப் பெற்ற பின்னரே அப்பகுதியில் நுழைந்துள்ளார். விமானத்தில் பயணிப்பதற்காக அமைச்சர் அப்பகுதிக்கு செல்லவில்லை. மாறாக, நடப்பு நிலையை கண்காணிப்பதற்காகவே அப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே பாதுகாப்பு அம்சம் கேள்விக்குறியாகிவிடவில்லை என்று அந்தோணி லோக் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


