கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் பாதுகாப்பு வளையத்திற்கு உட்பட்ட பகுதியில் சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோ செரி தியோங் கிங் சிங் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் சம்பவத்தில் பாதுகாப்பு அம்சம் ஒரு விவகாரமாக எழவில்லை . எனவே இதனை பெரிதுப்படுத்த வேண்டியதில்லை என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அமைச்சர் என்ற முறையில் தியோங் கிங் சிங் விஐபிக்கான சிறப்பு அனுமதி அட்டையைப் பெற்ற பின்னரே அப்பகுதியில் நுழைந்துள்ளார். விமானத்தில் பயணிப்பதற்காக அமைச்சர் அப்பகுதிக்கு செல்லவில்லை. மாறாக, நடப்பு நிலையை கண்காணிப்பதற்காகவே அப்பகுதிக்கு சென்றுள்ளார். அங்கே பாதுகாப்பு அம்சம் கேள்விக்குறியாகிவிடவில்லை என்று அந்தோணி லோக் விளக்கம் அளித்துள்ளார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


