நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை நீடித்தால், அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
இன்று சைபர்ஜெயா தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சூராவில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இவ்விவரத்தை வெளியிட்ட்ர.
அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் இத்தகைய நடவடிக்கையை எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் அவர் விளக்கினார்.
இருப்பினும், அமைச்சர்களின் செயல்திறனுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.
"அமைச்சர்கள் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்யும் வரை, சம்பளம் என்பது அவர்களுக்குரிய உரிமையாகும். ஆனால், பொருளாதாரச் சூழல் மேலும் சவாலானதாக மாறினால், அவர்களது சம்பளத்தை மறுபரிசீலனை செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.








