Apr 19, 2026
Thisaigal NewsYouTube
நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்தால் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படலாம் - பிரதமர் அன்வார்
தற்போதைய செய்திகள்

நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்தால் அமைச்சர்களின் சம்பளம் குறைக்கப்படலாம் - பிரதமர் அன்வார்

Share:

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார நிச்சயமற்ற நிலை நீடித்தால், அமைச்சர்களின் சம்பளத்தைக் குறைப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கக்கூடும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

இன்று சைபர்ஜெயா தீயணைப்பு நிலைய வளாகத்தில் உள்ள சூராவில் வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் இவ்விவரத்தை வெளியிட்ட்ர.

அமைச்சர்களின் சம்பளத்தை குறைக்கும் இத்தகைய நடவடிக்கையை எடுப்பதில் எந்தத் தடையும் இல்லை என்பதையும் அவர் விளக்கினார்.

இருப்பினும், அமைச்சர்களின் செயல்திறனுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாக அவர் வலியுறுத்தினார்.

"அமைச்சர்கள் தங்களது கடமைகளைச் சரியாகச் செய்யும் வரை, சம்பளம் என்பது அவர்களுக்குரிய உரிமையாகும். ஆனால், பொருளாதாரச் சூழல் மேலும் சவாலானதாக மாறினால், அவர்களது சம்பளத்தை மறுபரிசீலனை செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை," என்று டத்தோஸ்ரீ அன்வார் குறிப்பிட்டார்.

Related News

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பல்கலைக்கழக நாடகத்தில் அநாகரீகச் செயல்: மலாயா பல்கலைக்கழகத்திடமிருந்து உயர்க்கல்வி அமைச்சு அறிக்கை கோரல்!

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

பன்முகத்தன்மை நாட்டின் பலம்: சீக்கிய சமூகத்திற்கு 500 ஆயிரம் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தார் பிரதமர் அன்வார் இப்ராஹிம்

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

குற்றச் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு: சிறப்பு தீர்ப்பாயம் அமைக்க சட்டத்துறை ஆய்வு!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மதுபோதையில் வாகனம் ஓட்டிய வழக்கறிஞர் உள்ளிட்ட மூவர் கைது!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

மலாக்கா நீரிணை பாதுகாப்பானது: ஹார்முஸ் நீரிணையுடன் ஒப்பிட வேண்டாம் என அமைச்சர் உறுதி!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!

பயங்கரத் தீ விபத்தில் 1,000 வீடுகள் சாம்பல்; 8,000 பேர் வீடிழந்தனர்!