ஐந்து வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று வாகனங்கள் தீப்பற்றி எரிந்து கடுமையான சேதத்திற்குள்ளாயின.
ஒரு டிரெய்லர் லாரி, ஒரு வேன் மற்றும் மூன்று கார்கள் சம்பந்தப்பட்ட இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை என்று தீயணைப்புத் துறை தெரிவித்தது. பினாங்க, ஜெலுத்தோங், ஜாலான் மஸ்ஜித் நெகிரி, உதினி சுரங்கப்பாதை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் சிக்கிய டிரெய்லர் லாரி, வேன் மற்றும் புரோட்டான் 70 கார் ஆகியவை தீயில் பெருமளவில் எரிந்து சாம்பலாகின. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலைச் சீரமைக்க போக்குவரத்து போலீசார் கடமையாற்றினர்.








