Jan 23, 2026
Thisaigal NewsYouTube
13 மணி நேரத்திற்கு பிறகு சுங்கை பூலோ தொழிற்சாலையின் தீ அணைக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

13 மணி நேரத்திற்கு பிறகு சுங்கை பூலோ தொழிற்சாலையின் தீ அணைக்கப்பட்டது

Share:

சிலாங்கூர், சுங்கை பூலோ, கம்போங் பாரு சுங்கை பூலோ அருகில் தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் 6 தொழிற்சாலைகளில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு வீரர்கள் சுமார் 13 மணி நேரம் வரை கடுமையாக போராடினர்.

நேற்று, ஞாயிற்றுக்கிழமை மாலை மணி 4:00 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ, இன்று காலை 6:05 மணி அளவில்

முழுமையாக அணைக்கப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை அதிகாரி வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

நீரின் அழுத்தம் குறைவாக இருந்தது மற்றும் தொடர்ந்து பயங்கர வெடிப்பு சம்பவங்கள் போன்றவற்றினால் தீயை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதில் வீரர்கள் கடுமையாக போராட வேண்டியிருந்ததாக எம்டி ரசாலி குறிப்பிட்டார்.

சுங்கை பூலோ, செலாயாங், டாமன்சாரா, ரவாங், பூச்சோங் செக்‌ஷன் 7, கோலாலம்ர் தாமான் துன் டாக்டர் இஸ்மாயில் ஆகிய நிலையங்களை சேர்ந்த 12 தீயணைப்பு வண்டிகள் மூலம் 50 க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைப்பதில் முழு வீச்சில் ஈடுபட்டதாக அவர் தெரிவித்தார்.

Related News

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

புக்கிட் தாகார் பன்றி வளர்ப்புத் திட்டத்தை ரத்து செய்க: சிலாங்கூர் அரசுக்கு பிரதமர் அன்வார் வேண்டுகோள்

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

டாவோஸ் 2026: உலகப் பொருளாதார மன்றத்தில் மலேசியாவின் டிஜிட்டல் புரட்சி - அமைச்சர் கோவிந்த் சிங் தியோ அதிரடி

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

அமெரிக்க டாலருக்கு எதிராக ரிங்கிட் 3.9992 ஆக உயர்வு: 5 ஆண்டுகளில் இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டது

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

மலேசியாவில் பொது இடத்தில் குப்பை கொட்டியதற்காகச் சமூகச் சேவை தண்டனை: இந்தோனேசியப் பெண்மணிக்குத் தீர்ப்பு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

14 லட்சம் ரிங்கிட் திருட்டுப் பணத்தைப் பெற்றதாக முன்னாள் நிர்வாகி மீது குற்றச்சாட்டு

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது

இஸ்தானா நெகாரா பாதுகாப்புத் தடுப்பில் கார் மோதிய சம்பவம்: 21 வயது இளைஞர் கைது