பேராக் மாநிலம் தெலுக் இந்தான் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்த கொலை, கொள்ளை மற்றும் கேபிள் திருட்டு சம்பவங்களில் தொடர்புடையதாக நம்பப்படும் 7 உள்ளூர் ஆடவர்களைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
20 முதல் 30 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் 7 பேரும், தெலுக் இந்தான் மற்றும் பகாங் மாநிலம் பெந்தோங் பகுதிகளில் கைது செய்யப்பட்டதாகஹிலிர் பேராக் மாவட்ட போலீஸ் தலைவர் சுவா கொக் லியான் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட ஏழு பேரில் மூவர் வீடு உடைப்பு சம்பவங்களிலும், 6 பேர் கேபிள் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டதாக நம்பப்படுகின்றது.
இச்சம்பவங்களால் சுமார் 2 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுவா கொக் தெரிவித்துள்ளார்.








