Mar 31, 2026
Thisaigal NewsYouTube
டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது
தற்போதைய செய்திகள்

டீசல் விலை உயர்வு: தொழிற்சாலை பேருந்து கட்டணம் 28% வரை அதிகரிக்கிறது

Share:

நாட்டில் டீசல் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடியைச் சமாளிக்க, தொழிற்சாலை பேருந்து கட்டணங்களை 28 விழுக்காடு வரை உயர்த்துவதாக மலேசியத் தொழிலாளர் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சங்கத்தின் தலைவர் ஜேக்கி சியூ, இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆறு வாரங்களில் டீசல் விலை சுமார் 85 விழுக்காடு அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டார். இதற்கு முன்பு 200 லிட்டர் டீசல் நிரப்ப 598 வெள்ளி செலவான நிலையில், தற்போது அது 1,104 வெள்ளியாக உயர்ந்துள்ளது. இது பேருந்து உரிமையாளர்களுக்கு ஈடுகட்ட முடியாத பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதுள்ள நீண்டகால ஒப்பந்தங்களால் உடனடி மாற்றங்களைச் செய்ய முடியாமல் உரிமையாளர்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர். எனவே, இதர வர்த்தக வாகனங்களுக்கு வழங்கப்படுவதைப் போல, தொழிற்சாலை பேருந்துகளுக்கும் மாதத்திற்கு 2,000 லிட்டர் டீசலை, லிட்டருக்கு 2 ரிங்கிட் 15 சென் என்ற மானிய விலையில் வழங்க அரசு முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் நிதியமைச்சு மற்றும் பிரதமரின் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டும், இதுவரை முறையான பதில் கிடைக்கவில்லை எனச் சங்கம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி 25 முதல் 28 விழுக்காடு வரை தற்காலிகக் கட்டண உயர்வை அமல்படுத்துவதாகச் சங்கம் அறிவித்துள்ளது.

Related News