நவ. 24-
மத்திய அரசு, அரசு ஊழியர்களின் பணி நேரத்தை நான்கரை நாட்களாக மாற்றுவதற்கான திட்டத்தை முதலில் ஆராய வேண்டும் என அரசாங்கத் தலைமைச் செயலாளர், Tan Sri Shamsul Azri Abu Bakar தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இது தொடர்பான கொள்கைகளைக் கவனித்து, அதன் விளைவுகள் குறித்து தெளிவானத் தகவல்களை தனது தரப்பு பெற வேண்டும் என்றார்.
இதுவரை வேலையின் தரமும் தரத்தில் நேர்மறையான விளைவுகளையும் காணவில்லை என்று ஒப்புக்கொண்ட அவர், இது பற்றி மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
"இது ஒரு கொள்கை நிலையிலான முடிவு. எனவே, Johor அரசின் முடிவவை நாம் முதலில் ஆராய வேண்டும் என்றார் அவர்.
தற்போது மத்திய அரசு நான்கரை நாட்கள் பணி நேரத்தை அறிமுக செய்ய எந்த விருப்பமும் இல்லை. அதன் செயல்திறன் குறித்து தாம் கருத்து தெரிவிக்க முடியாது எனக் கூறிய அவர், அஃது இன்னும் செயல்படுத்தப்படவில்லை எனவுன் தற்போது கொள்கை அளவில் அறிவிப்பில் மட்டுமே உள்ளது எனவும் குறிப்பிட்டரர்.
ஜோகூர் அரசு, தமது அரசாங்க ஊழியர்களின் பணி நேரத்தை நான்கரை நாட்களாக மாற்றுவதைக் குறித்து Shamsul Azri இவ்வாறு கூறினார்.
ஜோகூர் முதல்வர் Datuk Onn Hafiz Ghazi கூறுகையில், 2025 ஜனவரி 1 முதல் வார இறுதி ஆட்களாக ஞாயிற்றுக்கிழமை, சனிக்கிழமையாக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த இந்த விவகாரம் பலரது கவனிப்பில் இருந்து வருவது குறிப்பிட்த்தக்கது.








