Jan 8, 2026
Thisaigal NewsYouTube
எல்ஆர்டி3 ரயில் பாதுகாப்புச் சோதனைகளில் சிக்கல்: குத்தகையாளரை நேரில் அழைக்க அமைச்சர் உத்தரவு
தற்போதைய செய்திகள்

எல்ஆர்டி3 ரயில் பாதுகாப்புச் சோதனைகளில் சிக்கல்: குத்தகையாளரை நேரில் அழைக்க அமைச்சர் உத்தரவு

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி.07-

எல்ஆர்டி3 ரயில் சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக நடத்தப்பட வேண்டிய மிக முக்கியமான 'பிழையற்ற ஓட்டம்' இன்னும் தொடங்கப்படவில்லை என்றும், இது தொடர்பாக விளக்கம் அளிக்க முதன்மை குத்தகையாளர் அழைக்கப்படுவார் என்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

சோதனைகளின் போது மென்பொருள் மற்றும் அமைப்புகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. குறிப்பாக, ரயில்கள் பிளாட்பாரத்தில் சரியான இடத்தில் நிற்காதது மற்றும் கதவுகள் சரியாக இயங்காதது போன்ற 33 தொழில்நுட்பச் சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

இந்தத் தாமதத்தினால் ஏமாற்றம் அடைந்தாலும், பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்ய முடியாது என்று அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தத் தொழில்நுட்பக் கோளாறுகளைத் தீர்ப்பது குறித்து விவாதிக்க, அடுத்த வாரம் பிரசரானா (Prasarana) நிர்வாகம் மற்றும் முதன்மை குத்தகையாளரான Setia Utama LRT3 Sdn Bhd ஆகியோருடன் ஒரு சிறப்புக் கூட்டம் நடத்தப்படும் என்று அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

Related News