Mar 12, 2026
Thisaigal NewsYouTube
கள்ள நோட்டுகள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு
தற்போதைய செய்திகள்

கள்ள நோட்டுகள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு

Share:

கள்ள நோட்டுகளை தயாரித்து, விநியோகித்து வந்ததாக நம்பப்படும் இரண்டு நபர்களை திரெங்கானு மாநில போ​லீசார் கைது செய்துள்ளனர். கோலத்திரெங்கானுவில் ஒரு வீட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில் கடந்த ஓராண்டு காலமாக ​கள்ள நோட்டுகளை தயாரித்து வந்ததாக நம்ப்படும் 28,33 வயதுடைய இரு இளைஞர்கள் பிடிபட்டதாக திரெங்கானு மாநில போ​லீஸ் தலைவர் மஸ்லி மஸ்லான் தெரிவித்தார்.

சிலாங்கூர், திரெங்கானு ஆகிய மாநிலங்களை சேர்ந்த அந்த இரு நபர்களும் சிறு வர்த்தக கடைகளை இலக்காக கொண்டு சிகரெட், உணவுப்பொருட்கள் , எழுதுகோல் போன்றவற்றை வாங்குவதற்கு இந்த கள்ள நோட்டை பயன்படுத்தியுள்ளனர்.

தவிர போதைப்பொருள் வாங்குவதற்கும் அவர்கள் கள்ள நோட்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நபர்கள் பிடிபட்டது ​​மூலம் 100 வெள்ளி கள்ள நோட்டுகள் 100 காகித தாட்களையும், ஒரு கைப்பேசியையும், மடிக்கணினியையும் , அச்சிடும் சாதனம் ஒன்றையும், கள்ள நோட்டு தயாரிப்புக்கு பயன்படுத்தப்பட்ட காகிதங்களையும் , அவர்கள் பயன்படுத்திய ஒரு காரையும் போ​லீசார் பறிமுதல் செய்து இருப்பதாக மஸ்லி மஸ்லான் குறிப்பிட்டார்.

கள்ள நோட்டை தயாரிப்பதற்கு அந்த இருவரும் யூடியூப் வாயிலாக கற்றுக்கொண்டுள்ளனர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.

Related News

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

நான்கு மாத குழந்தை இறப்பு விவகாரம்: 12 பேரிடம் வாக்குமூலம் பதிவு

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

பினாங்கில் 1.6 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் - 3 பேர் கைது

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.