இஹைலிங் மற்றும் டாக்சி வாகனங்களின் ஆயுட்கால 10 ஆண்டிலிருந்து 15 ஆண்டாக நீட்டிக்கப்படுவதாக, தரை பொது போக்குவரத்து அமலாக்க நிறுவனமான (எ.பி.எ.டி) அறிவித்துள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து டாக்சி மற்றும் இஹைலிங் வாகனகங்களுக்கும் இந்த ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
வாகனத்தின் பாதுகாப்பு, பயணிகளின் சௌகரியம் மற்றும் போக்குவரத்து தொழில் துறையின் தோற்றம் ஆகியவை உறுதிசெய்வதற்கு தவணை முறையில் மேற்கொள்ளப்படும் புஸ்பாக்கோம் விதிமுறைகளையும் இதர சோதனைகளையும் அனைத்து வாகனங்களும் பின்பற்ற வேண்டும் என அவ்வமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
நாட்டின் பொது போக்குவரத்து சேவையை மேம்படுத்தவும், அவற்றின் ஓட்டுநர்களின் தரத்தை உயர்த்துவதற்கும் இது போன்ற வாகனங்களின் ஆயுட்கால நீட்டிப்பு மிக அவசியம் என்பதனை அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


