மதுபானம் வாங்குவதற்கு, தாம் பாதுகாவலராக பணியாற்றி வந்த நீதிமன்றக் கட்டடத்தின் ஓர் அறையில் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து பணத்தைக் களவாடியதாக நம்பப்படும் பாதுகாவலர் ஒருவரை விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.
மலாக்கா, அயேர் கெரோ வில் உள்ள மலாக்கா நீதிமன்ற கட்டட வளாகத்தில் 25 வயதுடைய அந்த பாதுகாவலர் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பாதுகாவலர், இன்று அதே நீதிமன்றக் கட்டடத்தில் மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவரை 6 நாள் தடுத்துவைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

Related News

நாடெங்கிலும் சுகாதார மையங்களின் கட்டுமானப் பணிகளை அரசாங்கம் விரைவுபடுத்தும்: சுகாதார அமைச்சு

விதிமீறல் குற்றங்களுக்காக 92 குடிநுழைவு அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை

பினாங்கு, சுங்கை பட்டாணிக்கு அன்வார் ஒருநாள் பயணம்: முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்

நகர்ப்புற மறுமேம்பாட்டு மசோதாவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் தொடரும்: KPKT உறுதி

எச்ஆர்டி கோர்ப் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக டத்தோ முஹமட் ஷாமிர் நியமனம்


