Dec 3, 2025
Thisaigal NewsYouTube
பாதுகாவலருக்கு 6 நாள் தடுப்புக்காவல்
தற்போதைய செய்திகள்

பாதுகாவலருக்கு 6 நாள் தடுப்புக்காவல்

Share:

மதுபானம் வாங்குவதற்கு, தாம் பாதுகாவலராக பணியாற்றி வந்த நீதிமன்றக் கட்டடத்தின் ஓர் அறையில் பாதுகாப்புப் பெட்டகத்தை உடைத்து பணத்தைக் களவாடியதாக நம்பப்படும் பாதுகாவலர் ஒருவரை விசாரணைக்காக போலீசார் தடுத்து வைத்துள்ளனர்.

மலாக்கா, அயேர் கெரோ வில் உள்ள மலாக்கா நீதிமன்ற கட்டட வளாகத்தில் 25 வயதுடைய அந்த பாதுகாவலர் இக்குற்றத்தைப் புரிந்ததாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட பாதுகாவலர், இன்று அதே நீதிமன்றக் கட்டடத்தில் மாஜிஸ்திரேட் மசானா சினின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, விசாரணைக்கு ஏதுவாக அவரை 6 நாள் தடுத்துவைப்பதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது.

Related News