Mar 23, 2026
Thisaigal NewsYouTube
கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது

Share:

அம்பாங், ஜூன் 21-

சிலாங்கூர், அம்பாங் உகே -யில் உள்ள ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் சொத்துடமை முகவர் ஒருவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து நேற்று மாலை 5 மணியளவில் சம்பந்தப்பட்ட நபரிடமிருந்து புகார் கிடைக்கப் பெற்றதாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு குடியிருந்த வந்த சந்தேகிக்கும் நபர் வெளியே சென்று வீடு திரும்பிய வேளை, நுழைவாயில் கதவின் பூட்டு மாற்றம் செய்திருப்பதை குறித்து சம்பந்தப்பட்ட முகவரிடம் கேட்டறிந்துள்ளார்.

சம்பந்தப்பட்ட முகவரும் நுழைவாயில் கதவின் பூட்டு எதுவும் மாற்றம் செய்யப்படவில்லை என்று அறிவித்ததை தொடர்ந்து தன்னை வெளியே நிற்க வைத்து பூட்டிவிட்டதாக சந்தேகிக்கும் அந்நபர் குற்றச்சாட்டியதுடன் அவருக்கு கொலை மிரட்டலையும் விடுத்ததாக முகமது அசாம் கூறினார்.

இதில் 35 வயது சந்தேகிக்கும் அந்நபர் கைது செய்யப்பட்டு நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் மேலும் தகவலளித்தார்.

Related News

பட்டாசு விபத்து:  பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

பட்டாசு விபத்து: பினாங்கில் இனி பட்டாசு விற்பனைக் கடைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

கெடாவில் அதிக வெப்பம் காரணமாக மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு  - சுகாதார அமைச்சு தகவல்

குழந்தை இறப்பு உட்பட இஇவ்வாண்டில் வெப்பவாதத்துடன் தொடர்புடைய 15 சம்பவங்கள் பதிவு - சுகாதார அமைச்சு தகவல்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

புக்கிட் பிந்தாங் கட்டிடத்தில் தீ விபத்து: இரண்டு கடைகள் 70 விழுக்காடு சேதம்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழா / சீர்திருத்தங்களும் மக்கள் நல ஆட்சியும் முன்னிலைப்படுத்தப்பட்டது

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை

சரவாக் மாநிலத்தில் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை