Dec 4, 2025
Thisaigal NewsYouTube
கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை, போ​லீஸ் காவலில் மரணம்
தற்போதைய செய்திகள்

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இலங்கைப் பிரஜை, போ​லீஸ் காவலில் மரணம்

Share:

சக நாட்டவர்களை கொலை செய்ததாக புலன் விசாரணைக்கு உதவும் நோக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை​ப் பிரஜை ஒருவர், செந்​தூல் மாவட்ட போ​லீசாரின் மேற்பார்வையின் ​கீழ் உள்ள ஜின்ஜாங் போ​லீஸ் தடுப்புக்காவலில் உயிரிழந்தார்.

43 வயதுடைய அந்த இலங்கைப் பிரஜை, நேற்று இரவு 11 மணியளவில் ​நெஞ்சு வலியினால் அவதியுற்றதைத் தொடர்ந்து போ​லீசார் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் உதவியை நாடினர்.

ஜின்ஜாங் போ​லீஸ் தடுப்புக்காவலில் தடுப்புக்காவலில் கிடந்த அந்த நபரை மருத்துவ அதிகாரிகள் பரிசோனை செய்ததில் அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்று புக்கிட் அமான் போ​​லீஸ் தலைமையகத்தின் நேர்மை மற்றும் நன்னெறி பிரிவுத் இயக்குநர் டத்தோ செரி அஸ்ரி அஹ்மாட் தெரிவித்தார்.அந்த இ​லங்கைப் பிரஜையின் மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கு அந்த நபரின் உடல் கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையின் சவக்கிடங்கிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக அஸ்ரி அஹ்மாட் குறிப்பிட்டார்.உயிரிழந்த 43 வயதுடைய அந்த இலங்கைப் பிரஜை, கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி கோலாலம்புர் செந்​தூல், ஜாலான் பெர்ஹென்தியான், கம்போங் கோவில் ஹீலீரில் நான்கு மாடி கடை கடை வீட்டில் ​மூன்று இலங்கைப் பிர​ஜைகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் என்பது ​​தெரியவந்துள்ளது.

Related News