2023 ஆம் ஆண்டின் 'Satu Gelombang Perubahan' என்கிற நிர்வன சமூகக் கடப்பாட்டு (CSR) நிகழ்வை Pengurusan Aset Air Berhad (PAAB) மேற்கொண்டது. இத்திட்டத்தில் 1,289 கிலோகிராம் குப்பைகளை நாட்டில் உள்ள மூன்று இடங்களில் சேகரிக்கப்பட்டுள்ளன.
இந்நடவடிக்கையின் போது 1,000 மரங்கள் நடப்பட்டுள்ளன. பினாங்கு, நிபோங் தெபாங் - கில் 300 மரங்கள், சிலாங்கூர், தஞ்சோங் காராங்கில் 300 மரங்கள், ஜொகூர், கம்போங் சுங்கை மெலாயு மற்றும் இஸ்கண்டார் புத்ரி -யில் 400 மரங்கள் நடப்பட்டதாக PAAB -யின் நிர்வாக தலைவர் ஐஆர் சுல்கிஃப்லி ஒமார் தெரிவித்தார்.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை பாதுகாக்கும் நோக்கத்தில் இந்நடவடிக்கை PAAB மேற்கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் இத்திட்டம் காடுகள், வீடமைப்பு பகுதிகள், பொது இடங்களில் எறியப்படும் குப்பைகள் போன்றவற்றை சேகரித்து சுத்தம் செய்தனர்.
சமூகம் மற்றும் சுற்றுச்சூழலுலை பாதுகாக்கும் நடவடிக்கைகளாக சிஎஸார் திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் பசுமையான ஒரு சுற்றுச்சூழலை உருவாக்குவதன் அடிப்படையில்தான் இவை மேற்கொள்ளப்பட்டதாக ஐஆர் சுல்கிஃப்லி விவரித்தார்.








