இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 93,534 பேருடன் ஒப்பிடுகையில் 27 சதவீதம் அதிகரித்து 118,920 ஆக உள்ளது.
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்களாக இருப்பது மிகவும் கவலைக்குரியதாக உள்ளது என தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் தலைமை இயக்குநர் சுடெக்னோ அஹ்மத் பெலோன் கூறினார்.
“கடந்த ஆண்டு 137,000 க்கும் மேற்பட்ட போதைக்கு அடிமையானவர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும் மொத்த போதை பித்தர்கள் 65 சதவீதம் இளைஞர்கள் மற்றும் இளம் வயதினரை உள்ளடக்கியது” என்று அவர் நேற்று இரவு தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சியின் ஊடக பாராட்டு விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.

Related News

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்


