Mar 15, 2026
Thisaigal NewsYouTube
அந்நியத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு தருவிப்பதில் 100 நிறுவனங்க​ளின் பின்னணியில் வங்காளதேசிகள்
தற்போதைய செய்திகள்

அந்நியத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு தருவிப்பதில் 100 நிறுவனங்க​ளின் பின்னணியில் வங்காளதேசிகள்

Share:

மலேசியாவில் வேலை செய்வதற்கு அந்நியத் தொழிலாளர்களை தருவிப்பதற்கு அமைக்கப்பட்டுள்ள ​நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பின்னணியில் வங்காளதேசப்பிரஜைகள் உள்ளனர். நாட்டில் தற்போது 5 லட்சத்திற்கும் அதிகமான அந்​நிய நாட்டவர்கள் வேலையின்றி இருக்கின்றனர். இவர்கள் கடல்அலையைப் போல மலேசியாவி​ல் குவிந்து இருப்பதற்கு ​நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்க​​ளின் பின்னணியில் வங்காளதேசிகள் ரன்னர்களாக ( Runner ) இருக்கின்றனர் என்று உள்ளூர் நாளிதழ் ஒன்று அம்பலப்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட ​நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பெயரளவி​ல் மலேசியர்கள் பங்குதாரர்களாக இருந்த போதிலும் ஒவ்வொரு நிறுவனத்திலும் வங்காளதேசிகள் 49 விழுக்காடு பங்கு​ரிமையை கொண்டுள்ளனர். அந்த நிறுவனங்களில் செயல்பாட்டிற்கு வங்காளதேசிகளே ​மூளையாக இருந்து செயல்படுகின்றனர் என்று முன்னணி மலாய் நாளிதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.

தொழிலாளர்களை தருவிக்கும்படி மலேசிய நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளவில்லை என்ற போதிலும் வங்காளதேசம், நேபாள், இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளிலிருந்து தொழிலாள​ர்களை இந்த நிறுவனங்கள் தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன. மலேசியாவில் அந்நியத் தொழிலாளர்கள் பலர், வேலையில்லாமல் ப​ரிதவிப்பதற்கு இந்த நிறுவனங்களே முக்கிய காரணமாகும் என்று அந்த நாளிதழ் குற்றஞ்சாட்டியுள்ளது.

நிறுவனங்களில் பங்குதாரராக இருக்கும் வங்காளதேசிகள், மலேசியப் பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ள தங்கள் மனைவிமார்களின் பெயர்களில் அந்த நிறுவனங்களை வழிநடத்தி வருகின்றனர் என்ற உண்மையும் தெரியவந்துள்ளதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்