May 28, 2026
Thisaigal NewsYouTube
12 வயது சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிளில் மோதப்பட்டு முதியவர் மரணம்
தற்போதைய செய்திகள்

12 வயது சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிளில் மோதப்பட்டு முதியவர் மரணம்

Share:

ஜோகூர் பாரு, ஏப்ரல்.01-

12 வயது சிறுவன் ஒருவன் செலுத்திய மோட்டார் சைக்கினால் மோதப்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நேற்று காலை 9.45 மணியளவில் ஜோகூர் பாரு, கம்போங் ஶ்ரீ அமான், லோரோங் கெம்பீராவில் நிகழ்ந்தது.

65 வயதுடைய அந்த முதியவர் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது, 12 வயது சிறுவன் செலுத்திய மோட்டார் சைக்கிளினால் மோதப்பட்டு பலத்த காயத்திற்கு ஆளானதாக ஜோகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.

அந்த முதியவர், சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்ட போது அவர் உயிர் பிரிந்தது.

இச்சம்பவத்தில் அந்த சிறுவனும் காயத்திற்கு ஆளானார். 1987 ஆம் ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் இச்சம்பவம் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்