செகாமாட்,ஜன.11
ஜோகூர், செகாமாட், கம்போங் தெனாங்கில் புலி ஒன்று தாக்குதல் நடத்தியிருப்பதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பான தகவல் என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கம்போங் தெனாங்கில் ஆடவர் ஒருவரை புலி தாக்குவதைப் போல சமூக வளைத் தளங்களில் பகிரங்கப்பட்டு வரும் காணொளி உண்மை அல்ல.
அப்படியொரு சம்பவம் நிகழ்ந்ததாக இதுவரையில் எந்தவொரு புகாரையும் போலீசார் பெறவில்லை என்று செகாமாட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் சம்ரி மரின்சா தெரிவித்துள்ளார்.








