இன்று பத்து கேவ்ஸ் தொழிற்பேட்டையில் 3 தொழிற்சாலைகள் திக்கிரையாகின. அதில் சிக்கிய 50 வயது மிக்க சாய தொழிற்சாலை ஊழியருக்குக் கையில் தீக்காயம் ஏற்பட்டது.
இன்று நண்பகலில் நேர்ந்த அந்தத் தீ விபத்தில் ஒரு சாய தொழிற்சாலை, ஓர் உபரி பாகங்கள் தொழிற்சாலை, ஒரு பேக்கேஜிங் தொழிற்சாலை ஆகியன சேதமுற்றன.
தீக்காயம் ஏற்பட்ட ஊழியருக்கு, அரசு சார்பற்ற மருத்துவக் குழுவினர் சம்பவ இடத்தில் முதலுதவி அளித்தனர்.
அங்கு ஏற்பட்டத் தீயை அணைக்க வங்சாமாஜூ, ரவாங், சுங்கை பூலோ, பண்டான் இன்டா, ஹங் துவா, அம்பாங் ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 13 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக, சிலாங்கூர் மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் தலைவர் சுல்ஃபிகார் ஜாஃப்ஃபார் குறிப்பிட்டார்.
சாயத் தொழிற்சாலை 90 விழுக்காடு அழிந்தது எனவும் மற்ற இரு தொழிற்சாலைகள் 20 விழுக்காடு சேதமுற்றது எனவும் அவர் மேலும் சொன்னார்








