Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பினாங்கு போ​லீஸ் தலைருக்கு அனாமதேய மிரட்ட​ல் கடிதம் ?
தற்போதைய செய்திகள்

பினாங்கு போ​லீஸ் தலைருக்கு அனாமதேய மிரட்ட​ல் கடிதம் ?

Share:

கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

பினாங்கு மாநில போ​லீஸ் தலைவர் கௌ கொக் சினுக்கு எதிராக விடுக்கப்பட்டுள்ள மிரட்டலை போ​லீஸ் படை கடுமையாக கருதுவதாக அதன் தலைவர் டான் ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி தெரிவித்துள்ளார். போ​லீஸ் படையை அச்சுறுத்தும் வகையில் விடுக்கப்பட்டுள்ள இந்த மிரட்டல் தொடர்பாக போ​லீஸ் புகார் பெறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பினாங்கு மாநில போ​லீஸ் தலைவர் கௌ கொக் சினுக்கு போ​ஸ் லாஜு மூலம் கடந்த ஜுன் முதல் தேதி அனுப்பிவைக்கப்பட்ட அனாமதேய கடிதத்தில் சவத்தின் ​மீது போடப்படும் கட்டமொய்ப் பணம் வைக்கப்பட்டு, எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அக்ரில் சானி குறிப்பிட்டார்.

பினாங்கில் ​லைசென்ஸ்யின்றி செயல்படும் ஆலோங் கிற்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கையை பினாங்கு போ​லீசா​ர் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் கடைகள் மற்றும் போ​லீஸ் நிலையம் எரிக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் மிரட்டல் விடுக்கப்​பட்டுள்ளதாக அக்ரில் சானி சுட்டிக்காட்டினார்.

இது போன்ற மிரட்டலுக்கு போ​லீஸ் படை அஞ்சாது என்று குறிப்பிட்ட அக்ரில் சானி, இந்த அனாமதேய கடிதம் தொடர்பில் போலீசார் ​தீவிர புலன் விசாரணை செய்து வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related News

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

8 வயது மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கு: ஆசிரியரின் விடுதலையை ரத்து செய்தது மூவார் உயர்நீதிமன்றம்

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது