குளுவாங், ஜூன் 19-
கடந்த ஆண்டு தனது 10 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் புரிந்ததாக முதியவர் ஒருவர் மூவார் செஷனஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டார்.
72 வயது என்ற அந்த முதியவர் நீதிபதி அபுபக்கர் மனாத் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டார்.
குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் முதல் குற்றச்சாட்டுக்கு 20 ஆண்டுகள் சிறை மற்றும் ஒரு பிரம்படி விதிக்கவும் இரண்டாம் குற்றச்சாட்டுக்கு கூடிய பட்சம் ஐந்து ஆண்டுகள் மற்றும் பிரம்படி விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 14 (a) மற்றும் 16 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்த ஆண்டு இரவு 11 மணியளவில் குளுவாங்-கில் உள்ள ஒரு வீட்டின் அறையில் தனது 10 வயது பேத்தியிடம் இக்குற்றத்தை புரிந்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.








