May 15, 2026
Thisaigal NewsYouTube
காதலியைக் கொன்ற ஆடவருக்குத் தூக்குத் தண்டனை
தற்போதைய செய்திகள்

காதலியைக் கொன்ற ஆடவருக்குத் தூக்குத் தண்டனை

Share:

கிள்ளான், அக்டோபர்.15-

வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க மறுத்த காதலி மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டு, கொலை செய்த குற்றத்திற்காக ஆடவர் ஒருவருக்கு கிள்ளான் உயர் நீதிமன்றம் இன்று தூக்குத் தண்டனை விதித்தது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சிலாங்கூர், சபாக் பெர்ணாமில் நிகழ்ந்த இந்த கோரச் சம்பவம் தொடர்பில், மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலும், பின்னர் உயர் நீதிமன்றத்திலும், தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்ட 22 வயது முகமட் ஃபக்ருல் அய்மான் என்ற இளைஞருக்குத் தூக்குத் தண்டனை விதிப்பதாக நீதிபதி நோராஸ்லின் ஒத்மான் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே 23 ஆம் தேதி சபாக் பெர்ணாம், ஜாலான் சுங்கை லீமாவில் தனது காதலியான 21 வயது நூர் அனிசா அப்துல் வாஹாப் என்பவரைக் கொன்றதாக அந்த இளைஞர் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

இந்த இளம் பெண்ணின் கருகிய சடலம், சாலையோரத்தில் ஒரு புதரில் வழிப் போக்கரால் கண்டுபிடிக்கப்பட்டது.

Related News

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் அம்பாங் விபத்து: 24 வயது கல்லூரி மாணவர் மீது இரட்டைக்கொலை குற்றச்சாட்டு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

ஜாலான் பிஜேஇயு வெள்ளப் பாதிப்பு: அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நேரில் கள ஆய்வு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

மலேசிய இளைஞர் மன்றத்திற்கு 5 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு / தேசிய இளைஞர் தினக் கொண்டாட்டத்தில் அன்வார் அறிவிப்பு

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்:  ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பள்ளி கேண்டினில் எலிக் கழிவுகள்: ஒப்பந்ததாரருக்கு சம்மன் - தூய்மைப் பணிகள் தீவிரம்

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

பேங்க் நெகாராவில் தீவிபத்து - ஜெனரேட்டர் அறை சேதமடைந்தது

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ