Mar 14, 2026
Thisaigal NewsYouTube
முதியவருக்கு பத்து ஆண்டு சிறை
தற்போதைய செய்திகள்

முதியவருக்கு பத்து ஆண்டு சிறை

Share:

எட்டு வயது சிறுமிக்கு வாயில் முத்தம் கொடுத்த குற்றத்திற்காக 67 வயது முதியவர் ஒருவருக்கு கிள்ளான், செஷன்ஸ் நீதிமன்றம் இன்று பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்தது.

ஒரு மூத்தக்குடிமகனான அந்த முதியவர், தாம் செய்த குற்றத்திற்கு நியாயமான சந்தேகத்தை எழுப்புவதில் எதிர்தரப்பு தவறியதைத் தொடர்ந்து அந்நபருக்கு பத்து ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக நீதிபதி ஷஃபீரா சாயிட் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட முதியல் இன்று டிசம்பர் 27 ஆம் தேதி முதல் தனது சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஷஃபீரா சாயிட், தனது பத்து ஆண்டு சிறைத் தண்டனைக் காலம் முடிவடைந்தப் பின்னர் அந்த முதியவர் இரண்டு ஆண்டுகள் பாரோல் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட வேண்டும் தீர்ப்பு அளித்தார்.

எனினும் இத்தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படவிருப்பதாக அந்த முதியவரின் வழக்கறிஞர் எம். தனக்குமார் தெரிவித்ததைத் தொடர்ந்து அத்தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த முதியவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆ ம் தேதி மாலை 5.40 மணியளவில் கிள்ளான், ஜாலான் மேருவில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related News

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும்  - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

மலாக்கா மக்களுக்காக ஹரிராயா திறந்த இல்ல உபசரிப்பு நடத்தப்படும் - முதலமைச்சர் Ab Rauf Yusoh அறிவிப்பு

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

"மேற்காசிய போரால் பீதியடைய வேண்டாம் - அத்தியாவசியப் பொருட்கள் போதுமானதாக உள்ளது" - அமைச்சு தகவல்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூர் பத்து பஹாட்டில் 3.2 ரிக்டர் அளவிலான மிதமான நிலநடுக்கம்

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

ஜோகூரில் 7 வயது மாணவரை அடித்துக் காயப்படுத்திய தலைமையாசிரியர் கைது

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் புதிய தலைவராக ஆனந்த் ராஜ் தேர்வு

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்:  போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து

தப்பியோடிய ஸம்ரி வினோத், தமிம் டாஹ்ரி இருவரும் மலேசியாவிற்குத் திரும்ப வேண்டும்: போலீஸ் விசாரணைகள் தொடர வேண்டுமென அமைச்சர் ரமணன் வலியுறுத்து