மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், இன்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணனைச் சந்தித்து கலந்துரையாடினார்.
ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா பாசிர் பெலாங்கி போலோ மைதானத்தின் பெவிலியன் 2-ல் இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக, மாமன்னர் சுல்தான் இப்ராஹிம், தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது மலேசியாவுக்கான சிங்கப்பூர் தூதர் வேணு கோபால மேனன் மற்றும் ஜோகூர் பாருவுக்கான சிங்கப்பூர் துணைத் தூதர் இங் குவான் ஹாய் ஆகியோரும் உடனிருந்தனர்.
மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் தொடர்பான முக்கிய சந்திப்பாக இது அமைந்துள்ளது.









