Mar 11, 2026
Thisaigal NewsYouTube
அஸிஸிற்கு இரண்டரை லட்சம் வெள்ளி இழப்பீடு
தற்போதைய செய்திகள்

அஸிஸிற்கு இரண்டரை லட்சம் வெள்ளி இழப்பீடு

Share:

அவதூறு வழக்கு தொடர்பில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர லிம் குவான் எங், முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம்மிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை இழப்பீடுாக வழங்க வேண்டும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி அஸிஸா நவாவி, இந்த இழப்பீட்டுத் தொகைக்கு அப்பாற்பட்ட நிலையில் அப்துல் அஸிஸிற்கு, லிம், வழக்கு செலவுத் தொகையாக 70 ஆயிரம் வெள்ளியை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினரான அப்துல் அஜீஸ், அந்த பினாங்கு முன்னாள் முதல்வருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யததைத் தொடர்ந்து அத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் மேம்பாட்டாளர் நிறுவனத்திடமிருந்து 30 லட்சம் வெள்ளி ஆலோசனைக் சேவைக்கட்டணம் பெற்றதாக தமக்கு எதிராக லிம் கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து அப்துல் அஸிஸ், இந்த அவதூறு வழக்கை தொடுத்தார்.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு