அவதூறு வழக்கு தொடர்பில் பினாங்கு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர லிம் குவான் எங், முன்னாள் பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீம்மிற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை இழப்பீடுாக வழங்க வேண்டும் என்று புத்ராஜெயா அப்பீல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவிற்கு தலைமையேற்ற நீதிபதி அஸிஸா நவாவி, இந்த இழப்பீட்டுத் தொகைக்கு அப்பாற்பட்ட நிலையில் அப்துல் அஸிஸிற்கு, லிம், வழக்கு செலவுத் தொகையாக 70 ஆயிரம் வெள்ளியை வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
அம்னோவின் உச்ச மன்ற உறுப்பினரான அப்துல் அஜீஸ், அந்த பினாங்கு முன்னாள் முதல்வருக்கு எதிராக தொடுத்த அவதூறு வழக்கை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பினாங்கு உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யததைத் தொடர்ந்து அத்தீர்ப்பை எதிர்த்து அப்பீல் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
பினாங்கு கடலடி சுரங்கப்பாதைத் திட்டத்தில் மேம்பாட்டாளர் நிறுவனத்திடமிருந்து 30 லட்சம் வெள்ளி ஆலோசனைக் சேவைக்கட்டணம் பெற்றதாக தமக்கு எதிராக லிம் கூறிய குற்றச்சாட்டை எதிர்த்து அப்துல் அஸிஸ், இந்த அவதூறு வழக்கை தொடுத்தார்.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


