Mar 21, 2026
Thisaigal NewsYouTube
நான்கு வட்டி முதலைகளை போலீசார் கைது
தற்போதைய செய்திகள்

நான்கு வட்டி முதலைகளை போலீசார் கைது

Share:

சிலாங்கூர், மே 17-

சிலாங்கூர், ரவாங்-கில் உள்ள ஒரு வீட்டில் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது ஹா லோங் எனப்படும் நான்கு வட்டி முதலைகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட வீடு முறையான உரிமம் ஏதுமின்றி உள்ளூர் குடியிருப்புவாசிகளுக்கு பணத்தை கடனாக வழங்குவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஒருரிடமாகும் என்று வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் தெரிவித்தார்.

இதில் 22 க்கும் 34 க்கும் இடைப்பட்ட வயதுடைய மூன்று உள்ளூர் ஆண்கள் உட்பட ஒரு வியட்நாம் பெண்ணிடமிருந்து 7 கைத்தொலைப்பேசிகள், ஒரு புத்தகம், வீட்டு சாவி, ஏடிஎம் அட்டைகள் உட்பட 5,650 வெள்ளி ரொக்கப்பணமும் பறிமுதல் செய்யப்பட்டதாக ராம்லி முகமது கூறினார்.

வாடிக்கையாளர்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டி முதலைகள் தினசரி, வாராந்திர அல்லது மாதாந்திர முறையில் கடனை வழங்கி வசூலிப்பதாக ராம்லி முகமது அறிவித்தார். ஒரு மாதத்திற்கு அந்த சிண்டிகேட்டுகள் 2 லட்சம் வெள்ளி வரையில் சம்பாறிப்பதாகவும் ராம்லி முகமது தகவல் வெளியிட்டார்.

கைது செய்யப்பட்ட அந்நபர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கி மூன்று மற்றும் நான்கு நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து