Apr 2, 2026
Thisaigal NewsYouTube
அந்தோணி லோக் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தார்
தற்போதைய செய்திகள்

அந்தோணி லோக் தனது ஆழ்ந்த வருத்தத்தைப் பதிவு செய்தார்

Share:

சிப்பாங், மார்ச்.29-

ஹரிராயா பெருநாளை மக்கள் குதூகலத்துடன் வரவேற்கவிருக்கும் இவ்வேளையில் டிரெய்லர் லோரி மற்றும் கார் சம்பந்தப்பட்ட கோர விபத்தில் ஐவர் உயிரிழந்த சம்பவம் , மிகுந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

டிரெய்லர் லோரியின் முன் டயர் வெடித்ததன் காரணமாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த அந்த கனரக வாகனம், சாலைத் தடுப்பை உடைத்துக் கொண்டு எதிர்த்திசை வழித்தடத்தில் நுழைந்ததால் எதிரே வந்த காரை மோதி, தீப்பற்றிய நிலையில் ஐவர் உயிரிழக்கக் காரணமாக அமைந்துள்ளது என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டார்.

சம்பந்தப்பட்ட டிரெய்லர் லோரியின் போக்குவரத்து நிறுவனம், தற்போது விசாரணைக்கு இலக்காகியிருப்பதாகவும், நடப்பு பாதுகாப்பு முறைகள் மீறப்பட்டு இருக்குமானால் அந்த நிறுவனத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தோணி லோக் தெரிவித்தார்.

Related News

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த போலி தகவல்: ஐவருக்கு எதிராக எம்.சி.எம்.சி விசாரணை

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

கிழக்கு இந்தோனேசியாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - ஒருவர் பலி

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம்  அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் அரசு மற்றும் GLC ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே பணி' - பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை