நெகிரி செம்பிலான் மாநில மந்திரி பெசார் அமினுடின் ஹருண் வழங்கி வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக அம்மாநில அம்னோ அறிவித்துள்ளது.
கட்சியின் 14 சட்டமன்ற உறுப்பினர்களும் அமினுடின் மீதான நம்பிக்கையை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் யாங் டி பெர்துவான் பெசார் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவீர் -ஐப் பதவியில் இருந்து நீக்க முயலும் நான்கு தலைவர்களைச் சுற்றியுள்ள அரசியல் நெருக்கடியே இந்த முடிவுக்குக் காரணம் என்று மாநிலத் தலைவர் ஜலாலுடின் அலியாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து தாமும் மற்ற 13 உறுப்பினர்களும் “மிகுந்த வருத்தமும் ஏமாற்றமும்” அடைந்துள்ளதாக பெர்தாங் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜலாலுடின் தெரிவித்துள்ளார்.








