இணைய பகடிவதை விவகாரத்தை கட்டுப்படுத்தும் முயற்சிகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என இலக்கவியல் அமைச்சர் GOBIND SINGH DEO உறுதியளித்தார்.
இலக்கவியல் யுகத்தில் வணிகம், வாழ்க்கை, கல்வி போன்றவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள புதிய அணுகுமுறைகள் அவசியம்.
A-I செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்ப வளர்ச்சியில் இருந்து மலேசியா பின்தங்கிவிடாமல் இருக்க, எல்லா நிலை மக்களுக்கும் இணைய வசதி கிடைப்பதுது உறுதிப்படுத்தப்படும்.
அதே வேளை இணைய பாதுகாப்பும் பலப்படுத்தப்படும் என்றாரவர்.
அதன் பொருட்டு, நடப்பில் உள்ள சட்டங்களை திருத்தவும், புதிய சட்டங்களை இயற்றும் நடவடிக்கைகளுக்காக தொடர்பு அமைச்சு, MCMC மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம், அரச மலேசிய போலீஸ்படை ஆகியவற்றுக்கு கைகொடுக்க தமதமைச்சு தயாராக இருப்பதாக GOBIND கூறினார்.
அண்மையில் இணைய பகடிவதையால் தற்கொலை செய்துக் கொண்ட TIKTOK INFLUENCER ராஜேஸ்வரியின் விவகாரம் குறித்து நேற்று கூடிய அமைச்சரவையில் பேசப்பட்டது.
அதற்கு தக்க நடவடிக்கை எடுப்பது குறித்து தாமும், தொடர்பு அமைச்சர் FAHMI FADZIL-லும், பிரதமர் துறையின் சட்ட- கழக மறுமலர்ச்சி அமைச்ச்ர் DATO SERI AZALINA OTHMAN-னும் கலந்துரையாடியதாக GOBIND குறிப்பிட்டார்.








