Mar 19, 2026
Thisaigal NewsYouTube
பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!
தற்போதைய செய்திகள்

பறிமுதலைத் தவிர்க்க லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய உரிமையாளர்!

Share:

கோல திரங்கானு, அக்டோபர்.22-

திரங்கானு, கோல நெருஸ், பாடாங் ஆயர் தேசியப் பள்ளிக்கு அருகில் இன்று நண்பகல் 1.30 மணியளவில், போக்குவரத்து விதிமீறல்களுக்காகப் பறிமுதல் செய்யப்படுவதைத் தவிர்க்கும் நோக்குடன், ஒரு லாரி உரிமையாளர் தனது வாகனத்திற்குத் தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த லாரியை வயது குறைந்த இளையோர் ஒருவன் ஓட்டியுள்ளான். மேலும் அதன் மோட்டார் வாகன உரிமம் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலாவதியாகி இருந்ததுடன், 2023 முதல் புஸ்பாகோம் சோதனையிலும் தேர்ச்சி பெறவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததாக திரங்கானு மாநில சாலைப் போக்குவரத்துத் துறையின் இயக்குநர் முகமட் ஸம்ரி சமியோன் தெரிவித்தார்.

உரிமையாளர் ஒத்துழைக்க மறுத்து, லாரியைத் தீ வைத்துக் கொளுத்திய இந்தச் செயல், சட்டத்தை மீறியது மட்டுமன்றி, போக்குவரத்துத் துறை ஊழியர்களின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்தின் கீழ் காவற்படை விசாரித்து வருகிறது.

Related News

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

2.1 மில்லியன் ரிங்கிட் மோசடி வழக்கு: முன்னாள் மேலாளர் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

பங்சார் ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் அரிவாள் கொள்ளை: லாரி ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சம்ரி வினோத் கைவிலங்கிடப்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டது ஏன்? – காவல்துறை தலைமை இயக்குனர் காலிட் இஸ்மாயில் விளக்கம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

சர்வதேச போதைப்பொருள் கொள்கைகளை மதிப்பிடும் ஐ.நா உயர்மட்ட குழுவில் மலேசிய பேராசிரியர் டாக்டர் அதீபா நியமனம்

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

நான்கு மாத குழந்தை மரணம்: குழந்தை பராமரிப்பு மைய பணியாளர் மீது கொலைக் குற்றச்சாட்டு

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்

கவின்ராஜ் கொலை வழக்கு: இருவர் நீதிமன்றத்தில் ஆஜர், இருவர் சாட்சிகளாக மாற்றம்