தேசிய விமானச் சேவை நிறுவனமான மலேசியன் ஏர்லைன்ஸ் ஜெத்தா, மதீனா-விற்கான விமானச் சேவையை இன்று முதல் மீண்டும் துவங்கியுள்ளது.
இச்சேவையானது வரும் மார்ச் 8-ஆம் தேதி வரையில் தொடரும் என அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக, கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி தொடங்கி அந்த வழித்தடங்களுக்கான விமானச் சேவை இரத்து செய்யப்பட்டிருந்தது.
இருப்பினும், தோஹாவிற்கான விமானச் சேவையானது வரும் மார்ச் 7-ஆம் தேதி வரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றும், அங்குள்ள பாதுகாப்பு நிலைமையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, லண்டன் மற்றும் பாரிஸ் சார்லஸ் டி கோல் விமான நிலையம் செல்லும் மற்ற அனைத்து மலேசியன் ஏர்லைன்ஸ் விமானங்களும் கால அட்டவணைப்படி இயக்கத்தில் உள்ளன.
போர் நடக்கும் பகுதிகளிலிருந்து விலகி மாற்று வழித்தடங்களில் அவை இயக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.








