கங்கர்,ஆகஸ்ட் 18
கோலா பெர்லிஸ் -இல் இருந்து ARAU KOMUNITI கல்லூரியை நோக்கி பயணித்த சமயத்தில் PROTON WIRA ரக வாகனம் விபத்தில் சிக்கியதில் 18 வயது உயர்க்கல்விக்கூட மாணவி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்தின் போது, வாகனத்தினுள் இருந்த ஓட்டுநரும் மற்றொரு பயணியும் காயங்களுக்கு இலக்காகியுள்ளனர்.
19 வயது வாகன ஓட்டுநருக்கு ஏற்பட்ட நுன் உறக்கத்தால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கோலா பெர்லிஸ்-சாங்லூன் சாலையின் இடது புறத்தில் இருந்த தேக்கு மரத்தை மோதியதுதான் இன்று காலை அந்த விபத்து நிகழ்ந்ததற்கான காரணம் என்பதை ARAU போலிஸ் தலைவர் சூப்பர்டென்டன் அஹ்மத் மொஹ்சின் எம்.டி ரோடி உறுதிப்படுத்தியுள்ளார்.








