Apr 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நீலாய் வட்டாரத்தில் கேபள்களைத் திருடிய மூவர் கைது

Share:

நீலாய், ஜன.30-

நீலாய் வட்டாரத்தில் கேபள்களைத் திருடியதாக சந்தேகிக்கப்படும் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். இன்று அதிகாலையில் நீலாய் 1 இல் கேபள்கள் திருடப்பட்டுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து அவ்விடத்திற்கு மோட்டார் சைக்கிள் ரோந்துப் போலீசார் விரைந்ததாக நீலாய் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிந்தெண்டன் அப்துல் மாலிக் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பகுதியில் யாரும் காணாத நிலையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்த கார் ஒன்றில் பதுங்கியிருந்த இரு நபர்களையும், அருகில் புதரில் மறைந்திருந்த மேலும் ஒருவரையும் போலீசார் வளைத்துப் பிடித்ததாக அப்துல் மாலிக் தெரிவித்தார்.

இந்த மூவரும் களவாடியதாக நம்பப்படும் கேபள்கள், ஓர் அரிவாள், கேபலை வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் முதலியவற்றை போலீசார் பறிமுதல் செய்ததாக அவர் மேலும் கூறினார்.

பிடிபட்ட மூவரும் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது. அந்த மூவரையும் வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை தடுத்து வைப்பதற்கு போலீசார், நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

மருத்துவப் பயிற்சி அதிகாரிகளிடம் மோசடி - முழு விசாரணை நடத்துமாறு எம்எம்ஏ வலியுறுத்து

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

சபா 40 விழுக்காடு வருவாய் உரிமை தீர்ப்பு விவகாரம் / அரசாங்கத்தின் இடைக்காலத் தடை கோரிக்கைக்கு அப்பீல் நீதிமன்றம் அனுமதி

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

கோத்தா பாரு விமான நிலைய முனையத்தில் மோட்டார் சைக்கிள் பந்தயமா? - போக்குவரத்து அமைச்சர் கடும் சாடல்

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கிய சம்பவம்: உள்விசாரணை நடத்துகிறது கல்வி அமைச்சு

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

பாண்டான் பிகேஆர் ஆண்டுக் கூட்டம்: ரபிசிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்

மீட்டெடுக்கப்பட்ட 15.5 பில்லியன் ரிங்கிட்டே மக்களுக்கான சலுகைகளை நிலைநிறுத்த உதவுகிறது - அன்வார் தகவல்