நவ. 27-
பாகிஸ்தானில் வட மேற்குப்பகுதியில் தீவிரம் அடைந்து வரும் வன்முறையைத் தொடர்ந்து அந்நாட்டில் உள்ள 32 மலேசியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று விஸ்மா புத்ரா அறிவித்துள்ளது.
அந்த 32 மலேசியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தலைநகர் இஸ்லாமபாத்தில் உள்ள மலேசிய தூதரகத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்த 32 மலேசியர்களும் பாகிஸ்தானில் Chilas பகுதியிலிருந்து Bersham என்ற இடத்திற்கு இடம் மாறி செல்லும் போது பெரும் பரிதவிப்புக்கு ஆளாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








