நாட்டில் தற்போது நிலவிவரும் வெப்பநிலையைத் தொடர்ந்து, பள்ளியைத் தற்காலிகமாக மூடுவதற்கு இதுவரையில் எந்தவொரு பள்ளி நிர்வாகத்திடமிருந்து விண்ணப்பத்தைக் கல்வி அமைச்சு பெறவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் இங் தெரிவித்துள்ளார்.
கெடா மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்த போதிலும், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகளிடமிருந்தும் எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படவில்லை என்று லிம் ஹூய் இங் குறிப்பிட்டார்.
வெப்பத்தின் அளவு 37 செல்சியஸ்சை தாண்டி, 3 நாட்களுக்கு நீடிக்குமானால், பள்ளியை மூடுவதற்குக் கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதையும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related News

அந்த இந்தியப் பிரஜையின் முன்னாள் முதலாளியை ஆள்பல இலாகா விசாரணை நடத்தும்

மளிகைக்கடையில் கொள்ளையிட்டதாக போலீஸ்காரர் மீது குற்றச்சாட்டு

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது


