நாட்டில் தற்போது நிலவிவரும் வெப்பநிலையைத் தொடர்ந்து, பள்ளியைத் தற்காலிகமாக மூடுவதற்கு இதுவரையில் எந்தவொரு பள்ளி நிர்வாகத்திடமிருந்து விண்ணப்பத்தைக் கல்வி அமைச்சு பெறவில்லை என்று துணைக் கல்வி அமைச்சர் லிம் ஹூய் இங் தெரிவித்துள்ளார்.
கெடா மற்றும் கிளந்தான் ஆகிய மாநிலங்களில் வெப்பத்தின் அளவு அதிகரித்த போதிலும், அந்த மாநிலங்களைச் சேர்ந்த பள்ளிகளிடமிருந்தும் எந்தவொரு விண்ணப்பமும் பெறப்படவில்லை என்று லிம் ஹூய் இங் குறிப்பிட்டார்.
வெப்பத்தின் அளவு 37 செல்சியஸ்சை தாண்டி, 3 நாட்களுக்கு நீடிக்குமானால், பள்ளியை மூடுவதற்குக் கல்வி அமைச்சு அனுமதி வழங்கியிருப்பதையும் துணை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related News

சிரம்பான் ஜெயா காற்று மாசுபாடு: 30 ஆண்டுகளாக இயங்கி வந்த சட்டவிரோத ஆலை கண்டுபிடிப்பு

சமூக ஊடகப் பிரபலங்கள் கவனத்திற்கு: இலவசப் பரிசுகள் உள்ளிட்ட அனைத்து வருமானங்களையும் இனி கணக்கு காட்ட வேண்டும்

மனைவியுடன் சண்டை: 2 மாதக் குழந்தையைத் தரை தளத்தில் வீசிக் கொன்ற தந்தைக்கு 16 ஆண்டுகள் சிறை

தலையில் காயங்களுடன் கரை ஒதுங்கிய இராட்சத ஆமை

மாமன்னரின் உத்தரவுகள் உறுதியாகச் செயல்படுத்தப்படும் - பிரதமர் அன்வார் உறுதி


