பாச்சோக், மார்ச்.01-
PUSPEN எனப்படும் மலேசிய போதைப் பொருள் மறுவாழ்வு மையங்களில் சிகிச்சை பெறும் 6,000 பேரில் 25 விழுக்காட்டினர், அதாவது 1,500 பேர் தாமாகவே முன்வந்து சிகிச்சையில் இணைந்துள்ளதாக உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
2024-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்படி, இவ்வாறு தானாக முன்வந்து சிகிச்சை பெறுவோரின் பெயர்கள் குற்றப் பதிவுகளில் சேர்க்கப்படாது என்பதால், அதிகமானோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அவர் ஊக்கப்படுத்தினார். தற்போது தேசிய போதைப் பொருள் ஒழிப்பு முகமையான AADK பின்பற்றும் உளவியல், ஆன்மீகம் சார்ந்த முழுமையான சிகிச்சை முறைகளால், போதைப் பொருள் மீட்சியில் 80 விழுக்காடு வெற்றி விகிதம் எட்டப்பட்டுள்ளது.








