Feb 22, 2026
Thisaigal NewsYouTube
போலி முதலீட்டுத் திட்டம்: ஓய்வூதியதாரர் 300 ஆயிரம் ரிங்கிட் இழப்பு
தற்போதைய செய்திகள்

போலி முதலீட்டுத் திட்டம்: ஓய்வூதியதாரர் 300 ஆயிரம் ரிங்கிட் இழப்பு

Share:

கோலாலம்பூர், பிப்ரவரி.22-

முகநூலில் விளம்பரப்படுத்தப்பட்ட போலி முதலீட்டுத் திட்டத்தை நம்பி 81 வயது முதியவர் ஒருவர் 303 ஆயிரத்து 958 ரிங்கிட்டை இழந்துள்ளதாகப் புகாரளிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக ஆதாயம் தருவதாகக் கூறி ஆசை காட்டிய மர்ம நபர்கள், அந்த முதியவரிடமிருந்து 15 தவணைகளாகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்டக் காவற்படைத் தலைவர் உதவி ஆணையர் Hoo Chan Hook தெரிவித்துள்ளனர். ஈட்டிய ஆதாயத்தை எடுக்க வேண்டுமானால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என அவர்கள் மீண்டும் வற்புறுத்திய போதே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த முதியவர், தற்போது இது குறித்து காவற்படையினரிடம் புகார் செய்துள்ளார்.

Related News

மறைந்த இராணுவப் பயிற்சி வீரர் இந்திரனின் குடும்பத்திற்கு கல்வி அமைச்சின் உதவி உறுதி

மறைந்த இராணுவப் பயிற்சி வீரர் இந்திரனின் குடும்பத்திற்கு கல்வி அமைச்சின் உதவி உறுதி

காபுல் ஆற்று நீர் மாசுபாட்டிற்கான காரணம் கண்டறியப்பட்டது: இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

காபுல் ஆற்று நீர் மாசுபாட்டிற்கான காரணம் கண்டறியப்பட்டது: இரு நிறுவனங்கள் மீது நடவடிக்கை

புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கு: ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆதரவு

புளூம்பெர்க் நிறுவனத்திற்கு எதிரான அவதூறு வழக்கு: ஊழல் கண்காணிப்பு அமைப்பு ஆதரவு

திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது: விசாரணைக்கு பாஸ் கட்சி தயார்

திரங்கானு ஆட்சிக்குழு உறுப்பினர் கைது: விசாரணைக்கு பாஸ் கட்சி தயார்

இரமலான் உதவித்தொகை தொடர்பான போலிச் செய்திகள்: நிதி அமைச்சு எச்சரிக்கை

இரமலான் உதவித்தொகை தொடர்பான போலிச் செய்திகள்: நிதி அமைச்சு எச்சரிக்கை

மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு: 27 சட்டவிரோதக் குடியேறிகளும் மூளையாகச் செயல்பட்டரும் கைது

மனிதக் கடத்தல் கும்பல் முறியடிப்பு: 27 சட்டவிரோதக் குடியேறிகளும் மூளையாகச் செயல்பட்டரும் கைது