Mar 15, 2026
Thisaigal NewsYouTube
விலைக் கட்டுப்படியான வீடுகள்: இலக்கைத் தாண்டியது மடானி அரசாங்கம்
தற்போதைய செய்திகள்

விலைக் கட்டுப்படியான வீடுகள்: இலக்கைத் தாண்டியது மடானி அரசாங்கம்

Share:

ஜோகூர் பாரு, டிசம்பர்.09-

சராசரி வருமானம் கொண்ட குடும்பங்களுக்காக விலை கட்டுப்படியான வீடுகள் கட்டப்படுவதில் 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சம் வீடுகள் இலக்கை, மடானி அரசாங்கம் வெற்றிகரமாகத் தாண்டியுள்ளதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் ங்கா கோர் மிங் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி வரை 5 லட்சத்து 11 ஆயிரத்து 544 விலைக் கட்டுப்படியான வீடுகள் கட்டப்பட்டுள்ளன மற்றும் கட்டப்பட்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், 12 ஆவது மலேசியத் திட்டத்தின் கீழ் 5 லட்சம் வீடுகளைக் கட்டுவதற்குத் திட்டமிட்டு இருந்தது. தற்போது இந்த இலக்கு வெற்றிகரமாகத் தாண்டப்பட்டுள்ளதாக ங்கா கோர் மிங் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம் மற்றும் தனியார் துறை ஆகிய தரப்பினரின் கூட்டு ஒத்துழைப்பின் காரணமாக மடானி அரசாங்கம் இந்தச் சாதனையை நிகழ்த்த முடிந்தது என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

முந்தைய எந்தவோர் அரசாங்கமும், இந்தச் சாதனையை எட்டவில்லை என்பதையும் ங்கா கோர் மிங் தெளிவுபடுத்தினார்.

இன்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் பாரு, Vista Tiara Danga Bay- யில் Vista Tiara Johor Bahru வீடமைப்புத் திட்டத்தில் வீடுகளுக்கான சாவிகளை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் 2025 ஆம் ஆண்டு வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சின் அடைவு நிலை குறித்து விளக்கம் அளிக்கப்பட்ட செய்தியாளர்கள் கூட்டத்தில் அமைச்சர் ங்கா கோர் மிங் இதனைத் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்