Mar 18, 2026
Thisaigal NewsYouTube
மக்களளையில் தாக்கல் செய்யப்பட்டது தொழிலாளர்களுக்கு 24 மணி நேரம் சமூகப் பாதுகாப்புச் சலுகை மசோதா
தற்போதைய செய்திகள்

மக்களளையில் தாக்கல் செய்யப்பட்டது தொழிலாளர்களுக்கு 24 மணி நேரம் சமூகப் பாதுகாப்புச் சலுகை மசோதா

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.30-

மலேசியத் தொழிலாளர்களுக்கு வேலை நேரத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் அவர்களுக்கு 24 மணி நேரமும் சமூக பாதுகாப்புச் சலுகையை வழங்க வகை செய்யும் சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சட்டவிதி திருத்தம் மீதான சட்ட மசோதா, இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

உத்தேசச் சட்ட மசோதா, முதலாவது வாசிப்புக்காக மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தாக்கல் செய்தார்.

இந்தச் சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரிலேயே இரணடாவது வாசிப்புக்கும் விடப்படும் என்று மனித வள அமைச்சர் குறிப்பிட்டார்.

சொக்சோ சட்டத்தில் மலேசியத் தொழிலாளர்களுக்கு 24 மணி நேரமும் சமூகப் பாதுகாப்புச் சலுகையை வழங்குவதற்கு ஏதுவாக மனித வள அமைச்சின் கீழ் உள்ள சொக்சோ சட்டத்தில் 1969 ஆம் ஆண்டு சமூக பாதுகாப்பு ஷரத்தின் 4 ஆவது விதி திருத்தம் செய்யப்படவிருப்பதாக ஸ்டீவன் சிம் மக்களவையில் விளக்கம் அளித்தார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை