கோலாலம்பூர், ஜனவரி.30-
சுமார் 15 மில்லியன் ரிங்கிட் வருமான வரி பாக்கிக்காக நபர் ஒருவர் திவாலானவராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார்.
சையிட் ஷா அப்துல்லா என்று அந்த நபர் ஒன்றரை கோடி ரிங்கிட்டுக்கும் அதிகமான வருமான வரி பாக்கிகளைச் செலுத்தத் தவறியதால் திவாலானவராக பிரகடனப்படுத்தப்பட்டார்.
கடந்த 2011 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் திரட்டப்பட்ட மொத்தப் பாக்கிகள் ஒரு கோடியே 44 லட்சத்து 63 ஆயிரத்து 166 ரிங்கிட் 44 சென் ஆகும். இதில் வரி உயர்வுகளும் அடங்கும்.
அரசு சார்பில் உள்நாட்டு வருமான வாரியத்தின் சார்பில் ஆஜரான துணை பப்ளிக் பிராசிகியூட்டர் Qhistina Mohd Apandi கூறுகையில், திவால் நடவடிக்கைகளைத் தடுக்க Sayyid Shah தாக்கல் செய்த விண்ணப்பத்தை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.








