Mar 21, 2026
Thisaigal NewsYouTube
பெட்ரோனாஸ் குழாயில் துவாரம் ஏற்பட்டு எரிவாயு கசிந்தது: பிரதான சாலை மூடப்பட்டது
தற்போதைய செய்திகள்

பெட்ரோனாஸ் குழாயில் துவாரம் ஏற்பட்டு எரிவாயு கசிந்தது: பிரதான சாலை மூடப்பட்டது

Share:

சுக்காய், செப்டம்பர்.20-

திரெங்கானு, கெர்தே, செக்‌ஷன் 5 இல் கிழக்குக் கரையோர ரயில் திட்டமான இசிஆர்எல் EC இருப்புப் பாதை நிர்மாணிக்கும் இடத்தில் பெட்றோனாஸிஸிற்குச் சொந்தமான நிலத்தடி குழாயில் துவாரம் ஏற்பட்டு எரிவாயு கசிந்தது. இதனால் அனைத்து வகையான வாகன போக்குவரத்துக்கு கெர்தே-ரங்கோன் பிரதான சாலை மூடப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பில் இன்று காலை 9.53 மணியளவில் போலீசார் அவசர அழைப்பைப் பெற்றனர் என்று கெமாமான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ரஸி ரொஸ்லி தெரிவித்தார்.

எளிதில் தீப்பிடித்துக் கொள்ளக்கூடிய butane வகையைச் சேர்ந்த எரிவாயு குழாயில் துவாரம் ஏற்பட்டு, எரிவாயு கசிந்ததாக அவர் குறிப்பிட்டார். அதிர்ஷ்டவசமாக சம்பவம் நிகழ்ந்த இடம், கிராமங்களின் குடியிருப்புப் பகுதியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரமாகும். பொதுமக்கள் மற்றும் வாகனமோட்டிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு முதல் கட்ட எச்சரிக்கை நடவடிக்கையாக பிரதான பாதை மூடப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து