May 28, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் அமான் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் அருண் துரைசாமி
தற்போதைய செய்திகள்

புக்கிட் அமான் விசாரணைக்கு அழைக்கப்பட்டார் அருண் துரைசாமி

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

இந்து மதத்தை இழிவுப்படுத்தி வரும் சர்ச்சைக்குரிய சமயப் போதகரான ஜம்ரி விநோத் காளிமுத்துவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வீதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறி அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சமூக ஆர்வலர் அருண் துரைசாமி, புக்கிட் அமான் போலீஸ் தலைமையக விசாரணைக்கு இன்று அழைக்கப்பட்டார்.

ஜம்ரி விநோத் தொடர்பாக தாம் வெளியிட்ட ஒரு காணொளி குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் தம்மிடம் விசாரணை நடத்தியதாக புக்கிட் அமான் போலீஸ் தலைமையக கட்டடத்தின் வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் மலேசிய இந்து ஆகம அணி இயக்கத்தின் தலைவருமான அருண் துரைசாமி இதனைத் தெரிவித்தார்.

எனினும் வீதி ஆர்ப்பாட்டத்திற்கு இந்துக்களுக்கு தாம் அழைப்பு விடுத்தது, நாட்டின் அரசியலமைப்பு சட்டம் தங்களுக்கு வழங்கியுள்ள உரிமையை அடிப்படையாக கொண்டு முன்வைக்கப்பட்ட அறைகூவலாகும் என்று அதிகாரிகளுக்கு தாம் விளக்கம் அளித்ததாக அருண் துரைசாமி குறிப்பிட்டார்.

மலேசியர்கள் ஒவ்வொருவரும் தங்களின் சமய சுதந்திரத்தைப் பேணவும், பாதுகாக்கவும் அரசியலமைப்புச் சட்டம் முழு சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

அந்த சமய சுதந்திரத்திற்கு யார் சவால் விட்டாலும் அது குறித்து விவாதிப்பதற்கும், அமைதியான முறையில் ஆட்சேபக் கூட்டம் நடத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறது என்பதைத் தாம் தெளிவாக விளக்கியிருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்தார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்