Dec 4, 2025
Thisaigal NewsYouTube
பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் உடலில் காயம் கண்டுபிடிப்பு
தற்போதைய செய்திகள்

பலாப்ஸ் பயிற்சி மாணவர் ஷம்சுல் உடலில் காயம் கண்டுபிடிப்பு

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.30-

ஜோகூர், ஸ்கூடாய், மலேசிய தொழிற்நுட்ப பல்கலைக்கழகத்தின் பலாப்ஸ் ( Palapes) பயிற்சி மாணவர் ஷம்சுல் ஹரிஸ் ஷம்சுடின் உடலில் இன்று இரண்டாவது சவப் பரிசோதனை நடத்தப்பட்டதில் அவரின் உடலில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் டத்தோ நரான் சிங் ஆரா சிங் தெரிவித்தார்.

கோலாலம்பூர் பெரிய மருத்துவமனையில் நாட்டின் முன்னணி சவப் பரிசோதனை தடயவியல் நிபுணர் டத்தோ ஶ்ரீ டாக்டர் புபிண்டர் சிங் முன்னிலையில் நடத்தப்பட்ட சவப் பரிசோதனையில் மாணவர் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட காயங்கள் பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துவதாக உள்ளது என்று அந்த மாணவனின் பெற்றோர் சார்பில் ஆஜராகியுள்ள வழக்கறிஞர் நரான் சிங் குறிப்பிட்டார்.

எனினும் அந்த மாணவரின் உடலில் எந்தப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளன என்பதை விவரிக்க அவர் மறுத்து விட்டார். காலை 9 மணிக்குத் தொடங்கிய சவப் பரிசோதனை மாலை 4 மணிக்கு முடிவுற்றதாக அவர் தெரிவித்தார்.

22 வயதுடைய அந்த பயிற்சி மாணவன் துன்புறுத்தலுக்கு ஆளாகி, மரணமுற்றதாக அவரின் குடும்பத்தினர் சந்தேகித்ததைத் தொடர்ந்து அந்த மாணவனின் உடலைக் கல்லறையிலிருந்து தோண்டுவதற்கு ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related News